குத்துச்சண்டை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு

குத்துச்சண்டை போட்டியில் வென்ற கீழக்கரை பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு ெதரிவிக்கப்பட்டது.;

Update:2022-12-16 00:15 IST

கீழக்கரை, 

ராமநாதபுரத்தில் 20 பள்ளிகளில் 180 மாணவர்கள் பங்கேற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்து உள்ளனர். இதில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 7-ம் வகுப்பு மாணவன் அனீக் ரசீத், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் மாவட்ட அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.14 வயதுக்குட்பட்ட பிரிவில் 6-ம் வகுப்பு மாணவன் செய்யது அப்துல் ஹசன், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 8-ம் வகுப்பு மாணவன் முகமது ஜாசிர் ஆகியோர் மாவட்ட அளவிலான போட்டியில் 2-ம் இடத்தைப் பிடித்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் ரபீக் உசேன் ராஜா ஆகியோரை பள்ளி தாளாளளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம், பள்ளி தலைமை ஆசிரியர் மேபல் ஜஸ்டஸ் ஆகியோர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்