கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம் நடைபெற்றது;

Update:2023-05-25 00:15 IST

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே சேர்வைக்காரன்பட்டியில் உள்ள வெள்ளையா சுவாமி, செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் கணபதி பூஜை உள்ளிட்ட பல்வேறு யாகசாலை வேள்விகள் நடத்தப்பட்டு கடம்புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோவிலை வலம் வந்து கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்