கோர்ட்டு புறக்கணிப்பு

சங்கராபுரம் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

Update: 2023-07-03 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் வக்கீல் சங்க கூட்டம் தலைவர் ரவி தலைமையில், செயலாளர் ராமசாமி, பொருளாளர் பரமசிவம், மூத்த வக்கீல்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் தரக்கூடிய மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத பகண்டை கூட்டு ரோடு போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சூர்யாவையும், போலீஸ் அல்லாத ஒருவர் பஞ்சாயத்து பேசுவதை கண்டித்தும், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காத சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்தியாகு, இளங்கோ ஆகியோரை கண்டித்தும், இவர்களை பணி இட மாற்றம் செய்யக்கோரியும் வருகிற 5-ந் தேதிவரை 3 நாட்கள் கோா்ட்டு புறக்கணிப்பு செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சங்கராபுரம் வக்கீல்கள் நேற்று கோர்ட்டை புறக்கணித்தனர். இதில் மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்