நெல்லை மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2022-06-27 19:50 GMT

நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 18 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 171 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நெல்லை மாவட்டத்திலும் பரவல் அதிகரித்திருப்பதை ஒட்டி கலெக்டர் விஷ்ணு உத்தரவுபடி சுகாதாரப்பணிகள் மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்