மாடு முட்டி விவசாயி சாவு

காவேரிப்பட்டணம் அருகே மாடு முட்டி விவசாயி இறந்தார்.;

Update:2022-05-26 19:18 IST

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே உள்ள சாப்பர்த்தியை சேர்ந்தவர் சேகர் சாலமன் (வயது 63). விவசாயி. இவர் கடந்த மாதம் 30-ந் தேதி மோரனஅள்ளியில் தனது நிலத்தில் விவசாய பணி மேற்கொண்டு இருந்தார். அப்போது அருகில் மேய்ந்து கொண்டிருந்த மாடு திடீரென சேகர் சாலமனை முட்டி தள்ளியது. இதில் படுகாயமடைந்த சேகர் சாலமனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனிடையே சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்