காரிமங்கலம் அருகே சரக்கு வேன் மோதி தொழிலாளி சாவு

Update: 2023-05-26 18:45 GMT

காரிமங்கலம்:

காரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கூலித்தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மல்லசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் பச்சையப்பன் (வயது 27). கூலித்தொழிலாளி. இவர் கடந்த சில ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் நேற்று பச்சையப்பன், காரிமங்கலம் அருகே எட்டியாம்பட்டியில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

சின்னமுதலிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, எதிரே வந்த சரக்கு வேன் மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பச்சையப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

போலீசார் விசாரணை

இதனால் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் பச்சையப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சரக்கு வேன் டிரைவரான கிருஷ்ணகிரி மாவட்ட ஊத்தங்கரையை சேர்ந்த காதர் என்பவரை போலீசார் பிடித்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்