விடுதியில் காவலாளி பிணம்
குற்றாலத்தில் விடுதியில் காவலாளி இறந்து கிடந்தார். இறந்தது எப்படி? போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தென்காசி மாவட்டம் வெள்ளக்கால் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சிங்கதுரை (வயது 68). இவர் குற்றாலத்தில் ஒரு விடுதியில் காவலாளியாக பல ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் விடுதியின் உரிமையாளர் அவரை பணியிலிருந்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பணியில் இருந்து செல்லாமல் அங்கேயே இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவர் விடுதியில் இறந்து கிடந்தார். அவரது முகத்தில் காயம் இருந்துள்ளது. இதுகுறித்து அவரது மகன் மகேஷ் குற்றாலம் போலீசில் புகார் செய்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது தாக்கியதில் இறந்தாரா? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.