மத்தூர் அருகேபஸ் மோதி லாரி டிரைவர் சாவு

மத்தூர் அருகே பஸ் மோதி லாரி டிரைவர் இறந்தார்.

Update: 2023-09-18 19:45 GMT

மத்தூர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள பில்லகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் கவியரசன் (வயது 19). மினி லாரி டிரைவர். இவர் தொகரப்பள்ளிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கவியரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று இறந்த கவியரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்