மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி சாவு

மொரப்பூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி இறந்தார்.

Update: 2022-08-06 17:40 GMT

மொரப்பூர்:

மொரப்பூர் அருகே உள்ள எம்.பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் மொரப்பூரில் இருந்து எம்.பள்ளிப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். முல்லை நகர் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியது. இந்த விபத்தில் கோவிந்தசாமி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்