விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
குருபரப்பள்ளி அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் இறந்தார்.
குருபரப்பள்ளி:
குருபரப்பள்ளி அருகே உள்ள கீழ்பீமாண்டப்பள்ளி சேர்ந்தவர் சதீஷ் (வயது27). தனியார் நிறுவன ஊழியர். சம்பவத்தன்று இவர் மோட்டார்சைக்கிளில் சோமநாதபுரம் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சதீசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சதீஷ் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.