தென்னை மரம் விழுந்து வாலிபர் சாவு

காவேரிப்பட்டணம் அருகே தென்னை மரம் விழுந்து வாலிபர் இறந்தார்.

Update: 2023-01-31 18:45 GMT

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே உள்ள மஞ்சமேடு பகுதியை சேர்ந்தவர் பழனி. விவசாயி. இவருக்கு சொந்தமாக தென்பெண்ணை ஆற்று அருகில் தென்னந்தோப்பு உள்ளது. தர்மபுரி அருகே உள்ள வாணியம்பாடி கொட்டாயை சேர்ந்த வியாபாரி நடராஜன் தென்னை மரங்களை விலைக்கு வாங்கி தொழிலாளர்கள் மூலம் வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நடராஜனின் மகன் அன்பு (வயது27) மீது எதிர்பாராதவிதமாக தென்னை மரம் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அன்பு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்