டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சாவு

சிங்காரப்பேட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2023-03-08 18:45 GMT

ஊத்தங்கரை

சிங்காரப்பேட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

டிராக்டர் கவிழ்ந்தது

திருப்பத்தூர் மாவட்டம் பூசாரிவட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 32). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று முன்தினம் சிங்காரப்பேட்டை அருகே கோவிந்தாபுரம் நல்லதண்ணி குட்டை ஏரி பகுதியில் டிராக்டரை ஓட்டி சென்று கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் கவிழ்ந்தது. இந்த விபத்தில் திருப்பதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிங்காரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று திருப்பதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்