கண்டக்டருக்கு கொலை மிரட்டல்

தேனி அல்லிநகரத்தில் அரசு பஸ் கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2023-04-22 18:45 GMT

தேனி அல்லிநகரம் தெற்கு கோட்டைக்களம் தெருவை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 41). அரசு பஸ் கண்டக்டர். கடந்த 18-ந் தேதி இவர், தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது பாபு என்ற நாராயணசாமி என்பவர் செல்போனை வைத்து குணசேகரன் வீட்டை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தார். இதைக்கண்ட குணசேகரன் அதை தட்டி கேட்டார். அப்போது ஆத்திரமடைந்த பாபு தகாத வார்த்தைகளால் பேசியதுடன், கீழே கிடந்த கல்லை எடுத்து அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் படுகாயம் அடைந்த குணசேகரன் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அல்லிநகரம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்