முதல்-அமைச்சர் குறித்து அவதூறு - பா.ஜ.க. பிரமுகர் கைது

முதல்-அமைச்சர் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-09 04:09 GMT

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி முத்துக்குமாரசாமி லே -அவுட்டை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 36). இவர், கோவை தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவராக உள்ளார். இவர், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை விமர்சித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பொள்ளாச்சி குமரன் வீதியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் ஆறுமுகசாமி என்பவர் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சமூக வலைதளத்தை தவறாகப் பயன்படுத்துதல், அவதூறு பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செல்வகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்