இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2022-10-28 00:15 IST

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவிலில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைமை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஆப்ரகாம் தலைமை தாங்கினார். மாணவர் சங்க மாநில தலைவர் அரவிந்தசாமி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க நகர தலைவர் தண்டபாணி, மாணவர் சங்க முன்னாள் மாநில செயலாளர் உச்சிமாகாளி, மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அருண், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மாடசாமி ஆகியோர் பேசினர். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்