மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கம்பத்தில் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2022-05-19 22:59 IST

கம்பத்தில் காந்தி சிலை அருகே மாதர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு அனைத்து இந்திய மாதர் சங்க கம்பம் பகுதி தலைவர் வெண்மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெண்மணி, கம்பம் நகர பொறுப்பாளர் முருகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாராயணதேவன்பட்டியில் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதையும், அவரது மகனை கொலை செய்ததை கண்டித்தும் கோஷமிட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துெகாண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்