டெங்கு விழிப்புணர்வு முகாம்

ராயகிரியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2023-02-09 18:45 GMT

சிவகிரி:

ராயகிரி பேரூராட்சியும், ராயகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் சாந்தி சரவணபாய் ஆலோசனையின்படி, சிவகிரி அருகே ராயகிரி பகுதியில் டெங்கு விழிப்புணர்வு முகாமை நடத்தியது. பேரூராட்சி செயல் அலுவலர் சுதா தலைமை தாங்கி, முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவ அலுவலர் கிருபா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராயகிரி பகுதியில் காந்தி தெரு, பள்ளிகூடத் தெரு, மெயின் ரோடு, மருத்துவமனை தெரு ஆகிய இடங்களில் மருத்துவ முகாம் நடத்துதல், நிலவேம்பு குடிநீர் வழங்கல், ஓட்டுமொத்த தூய்மைப்பணி, புகை மருந்து அடித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.

முகாமில் சுகாதார ஆய்வாளர் பாரத், இசக்கிமுத்து, சிவா மற்றும் தூய்மை பணி மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக டெங்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. முகாமிற்கான ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர் பாரத் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்