7 மையங்களில் வளர்திறன் தேர்வு

நாமக்கல் மாவட்டத்தில் 7 மையங்களில் வளர்திறன் தேர்வை 4,552 மாணவ, மாணவிகள் எழுதினர்.;

Update:2023-09-25 00:13 IST

சர்வதேச அளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் திறன்வளர் தேர்வு பிரான்ஸ் நாட்டில், லயான் மாகாணத்தில் அடுத்த ஆண்டு நடக்கிறது. இதையொட்டி உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுடைய தொழில்நுட்ப திறனை எவ்வாறு வளர்த்து கொண்டு உள்ளனர் என்பதை கண்டறியும் வகையில், மாநிலம் வாரியாக, வளர் திறன் தேர்வு நடத்தப்படுகிறது.

அதன்படி மாநில அளவிலான வளர் திறன் தேர்வு நிலை-1 தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரி, டிரினிடி மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். தொழில்நுட்பக் கல்லூரி, அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி என 7 மையங்களில் நடந்தது.

இதில் 4,552 தேர்வர்கள் கலந்து கொண்டனர். மாநில அளவிலான தேர்வை அடுத்து, தேசிய அளவிலும், அதை தொடர்ந்து சர்வதேச அளவிலும், வளர் திறன் தேர்வு நடத்தப்படும். 'வளர் திறன் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் பெரு நிறுவனங்களில் வேலைவாய்ப்பும், சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்றால், ரூ.75 ஆயிரம் ஊக்கத்தொகையும் கிடைக்கும் என உயர் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்