பொம்மிடி அருகே நாய்கள் குரைத்ததில் தவறி விழுந்த மூதாட்டி சாவு

பொம்மிடி அருகே நாய்கள் குரைத்ததில் தவறி விழுந்த மூதாட்டி சாவு

Update: 2022-11-06 18:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி அருகே வே.முத்தம்பட்டி கனிகாரன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாதம்மாள் (வயது 60). இவர் தனது மகன் கிருஷ்ணன் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி மாதம்மாள் அதே கிராமத்தில் உள்ள தனது சகோதரி ராஜம்மாள் வீட்டுக்கு சென்றபோது, அங்கு நின்ற தெருநாய்கள் மாதம்மாளை அச்சுறுத்தும் வகையில் குரைத்தது. இதில் நிலைதடுமாறி தவறி கீழே விழுந்த மாதம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வே.முத்தம்பட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாதம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து கிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் பொம்மிடி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்