தேன்கனிக்கோட்டை:
தளி அருகே உப்பாரப்பள்ளியை சேர்ந்தவர் ஷில்பா (வயது 22). உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த ஷில்பா கடந்த 3-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஷில்பா நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.