விபத்தில் எலக்ட்ரீசியன் பலி

Update: 2023-03-16 19:00 GMT

ஓசூர்:

ஓசூர் அடுத்த நல்லூரை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 38). எலக்ட்ரீசியன். இவர் கடந்த 14-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அவர் படுகாயம் அடைந்து இறந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்