சுகாதார மேற்பார்வையாளர் பணியிடை நீக்கம்

நாட்டறம்பள்ளி சுகாதார மேற்பார்வையாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-06-01 18:51 GMT

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி சுகாதார மேற்பார்வையாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வாணியம்பாடி அருகே உதயேந்திரம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60), இவர் நாட்டறம்பள்ளி பேரூராட்சி அலுவலகத்தில் சுகாதார மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இவர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் கடந்த 2018-ம் ஆண்டில் உதயேந்திரம் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதுகுறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் தேவராஜ் மீது விசாரணை இன்னும் முடியாத நிலையில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கையாக பணியிடை நீக்கம் செய்து நாட்டறம்பள்ளி பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்