2,700 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 2,700 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Update: 2023-02-05 18:45 GMT

கச்சிராயப்பாளையம்

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று கல்வராயன்மலையில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தும்பராம்பட்டு, ஆவாளூர் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2,700 லிட்டர் சாரய ஊறலை கண்டுபிடித்த போலீசார் அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்