ஆரணி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு துண்டு பிரசுரம் வினியோகம்

ஆரணி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு துண்டு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.;

Update:2023-03-18 22:55 IST

ஆரணி 

ஆரணி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு துண்டு பிரசுரம்  வினியோகிக்கப்பட்டது.

ஆரணி நகராட்சியில் பழைய பஸ் நிலையம், புதிய நிலைய பகுதிகளில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என நகராட்சி சார்பில் விழிப்புணர்வு செய்யப்பட்டது. நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி மற்றும் சுகாதார அலுவலர் மோகனசுந்தரம் முன்னிலையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை சுகாதார ஆய்வாளர் ராமசந்திரன் வழங்கினார். இதில் மேற்பார்வையாளர் குமார், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் பாபுஜி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்