மாவட்ட அளவிலான கேரம் போட்டி

திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது.

Update: 2022-10-10 18:45 GMT

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம் மற்றும் திண்டுக்கல் அரிமா சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடந்தது. திண்டுக்கல் ஜி.டி.என். சாலையில் உள்ள அரிமா மஹாலில் நடந்த இப்போட்டியில் 100-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கணைகள் பங்கேற்று விளையாடினர். போட்டிகள் ஒற்றையர் பிரிவு அடிப்படையில் சீனியர் ஆண், பெண்களுக்கு நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் பிரிவில் பெலிக்ஸ், மணிபாண்டியராஜா, ஆனந்தபிரபு ஆகிய வீரர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர்.


இதேபோல் பெண்கள் பிரிவில் ஏ.சத்யா, எம்.சத்யா, தனலெட்சுமி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில், மாவட்ட கேரம் சங்க சேர்மன் நாட்டாண்மை காஜாமைதீன் பங்கேற்று வீரர்-வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். இதில் கேரம் சங்க தலைவர் சுவாமிநாதன், இணைச்செயலாளர் மருதமுத்து, திண்டுக்கல் அரிமா சங்க தலைவர் குப்புசாமி, செயலாளர் மலைராஜன், போட்டி ஒருங்கினைப்பாளர் ஆல்வின் செல்வக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்