பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி

பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடந்தது.;

Update:2022-10-23 00:07 IST

கரூர் அருகே உள்ள நெரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் கரூர் மாவட்டத்தில் இருந்து 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இப்போட்டியில் நெரூர் அரசு மேல்நிலைப்பள்ளி 14 மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் முதலிடமும், 19 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் முதலிடமும் பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். மேலும் 17 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் இரண்டாம் இடம் பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்