தி.மு.க. கவுன்சிலர்- மகன் உள்பட 3 பேர் கைது

தி.மு.க. கவுன்சிலர்- மகன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-29 17:15 GMT

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரிமேட்டை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு தேவிகா (வயது 16), விக்னேஸ்வரி ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

தேவிகா பிளஸ்-1 படித்துள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தங்கராஜ் பிரிந்து சென்று விட்டார்.

இந்நிலையில் கடந்த 24-ந்தேதி வீட்டில் இருந்த தேவிகா நள்ளிரவில் காணவில்லை. இந்தநிைலயில் கடந்த 26-ந்தேதி ஊருக்கு அருகாமையில் உள்ள கிணற்றில் ேதவிகாக பிணமாக மிதந்துள்ளார்.

இதையடுத்து குளித்தலை போலீசார் தேவிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தேவிகாவின் தாய் கலைவாணி கொடுத்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக சவாரிமேட்டை சேர்ந்த நங்கவரம் பேரூராட்சி தி.மு.க. 6-வது வார்டு கவுன்சிலா் குணசேகர் (53), அவரது 18 வயது மகன், குணசேகரின் மைத்துனர் முத்தையன் (51) ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழுமையான விசாரணை முடிந்த பிறகு தான் தேவிகாகா எப்படி இறந்தார் என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்