தி.மு.க. இளைஞரணி கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் ஆய்வு

வேப்பூர் அருகே தி.மு.க. இளைஞரணி கூட்டம் நடைபெறும் இடத்தை அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-08-27 18:45 GMT

சிறுபாக்கம்

தி.மு.க. ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட இளைஞரணி செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நாளை(செவ்வாய்கிழமை) வேப்பூரை அடுத்த கழுதூர் வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களின் பின்புறமுள்ள கலைஞர் திடலில் காலை 10 மணியளவில் நடக்கிறது. இதற்கு தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசுகிறார். இதை முன்னிட்டு கூட்டம் நடைபெற உள்ள இடத்தில் முன்னேற்பாடு பணிகளில் தி.மு.க. வினர் ஈடுபட்டுள்ளனர். இதை தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளரும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சி.வெ.கணேசன் நேரில் பார்வையிட்டார். அப்போது கூட்டத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள் எண்ணிக்கை, இடத்தின் சுற்றளவு குறித்து ஆய்வு செய்தார். மேலும், பணிகளை விரைந்து முடிக்க கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது தி.மு.க. விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலர்கள் பாவாடை கோவிந்தசாமி, செங்குட்டுவன், அமிர்தலிங்கம், திட்டக்குடி நகர செயலர் பரமகுரு ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்