அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நியமனத்தை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. வழக்கு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

சிண்டிகேட் கூட்டங்களின் வீடியோ பதிவை பத்திரப்படுத்தும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-04-17 10:32 GMT

சென்னை,

அண்ணா பல்கலைக்கழக பதிவாளராக டாக்டர் பிரகாஷ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.க. எம்.எல்.ஏ. பரந்தாமன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பிரகாஷை பதிவாளராக நியமிக்க சிண்டிகேட் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், சிண்டிகேட் கூட்ட முடிவுகளை திருத்தி பிரகாஷை பதிவாளராக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமித்துள்ளதாகவும் தனது மனுவில் பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, சிண்டிகேட் கூட்டங்களின் வீடியோ பதிவை பத்திரப்படுத்தும்படி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த மனு தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசின் உயர்கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை ஜூன் 7-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.


Full View


Tags:    

மேலும் செய்திகள்