மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்
காட்பாடியில் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.;
வேலூர் மின் பகிர்மான வட்டம், காட்பாடி கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் காந்தி நகரில் உள்ள காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் பரிமளா வரவேற்றார்.
இதில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். அதைத் தொடர்ந்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மின்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.