மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்
காட்பாடியில் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடக்கிறது.;
வேலூர் மின் பகிர்மான வட்டம், காட்பாடி கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடக்கிறது.
கூட்டத்திற்கு மேற்பார்வை பொறியாளர் அருணாசலம் தலைமை தாங்குகிறார். காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளை தெரிவிக்கலாம்.
இந்த தகவலை காட்பாடி கோட்ட செயற்பொறியாளர் பரிமளா தெரிவித்துள்ளார்.