இளம்பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு

கமுதியில் இளம்பெண்களுக்கான கல்வி கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2023-08-11 18:45 GMT

கமுதி, 

கமுதி சத்திரிய நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், வளர் இளம் பெண்களுக்கான கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு வந்தவர்களை பள்ளி முதல்வர் ஸ்ரீதேவி வரவேற்றார்.நிர்வாக குழு தலைவர் அய்யாதுரை, செயலர் யோகேஸ்வரன், பொருளாளர் குமரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பரமக்குடி அரசு மருத்துவமனை சித்தா மருத்துவர்கள் துளசி, மருதமுத்து ஆகியோர் கலந்து கொண்டு வளர் இளம் பருவத்தினருக்கான பிரச்சினைகளும் அதற்குரிய தீர்வுகளும் குறித்து எடுத்துரைத்தனர். இதில் மாணவிகள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்