வேன் மோதி முதியவர் சாவு

ஆர்.எஸ்.மங்கலம் அருகே வேன் மோதி முதியவர் இறந்தார்.

Update: 2022-08-07 18:27 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அழகர்தேவன்கோட்டை ஊராட்சி நோக்கன் கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முத்துராக்கு (வயது 62). இவர் நேற்று முன்தினம் ஊர் அருகே உள்ள ஊருணியில் குளித்துவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் உப்பு விற்று வந்த ஒரு வேன் பின்புறமாக வந்து முத்துராக்கு மேல் மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்து கோவிந்தம்மாள் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்கு பதிவு செய்து கடலாடி கடுகு சந்தை பகுதியைச் சேர்ந்த சேதுபாண்டி மகன் மதி(24) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்