அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு

நீடாமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு

Update: 2023-06-06 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் அருகே சீதாராமன் சாவடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 60). இவர் நேற்று முன்தினம் இரவு சீதாராமன் சாவடி மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்