முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-16 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் அருகே உள்ள எம்.பறையங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையா (வயது 76). இவர் மஞ்சள்காமாலை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கண்ணையா சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணையா இறந்தார். இதுகுறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்