முதியவர் தற்கொலை

களக்காடு அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-29 18:45 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கருப்பந்தோப்பை சேர்ந்தவர் விவசாயி இசக்கி (வயது 72). இவருடைய மனைவி சீதை, கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இதனைதொடர்ந்து இசக்கி தனது மகன் மணிகண்டனுடன் வசித்து வந்தார். மனைவி இறந்ததால் இசக்கி மன விரக்தியுடன் காணப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் கருப்பந்தோப்பு குளக்கரையில் வைத்து விஷம் குடித்தார். பின்னர் வீட்டிற்கு வந்த அவர் மயங்கினார். இதைப்பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக இசக்கி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்