விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை

போடியில் விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-12 18:45 GMT

 போடி கீழதெருவை சேர்ந்தவர் ஒச்சம்மாள் (வயது 79). கடந்த 10-ந்தேதி இவர், வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்