தலையணையால் முகத்தை அமுக்கி மனைவி கொலை-எலக்ட்ரீஷியன் கைது

குடும்ப தகராறில் தலையணையால் முகத்தை அமுக்கி மனைவியை கொலை செய்த எலக்ட்ரீஷியனை போலீார் கைது செய்தனர்.

Update: 2023-03-14 11:44 GMT

ஆற்காடு

குடும்ப தகராறில் தலையணையால் முகத்தை அமுக்கி மனைவியை கொலை செய்த எலக்ட்ரீஷியனை போலீார் கைது செய்தனர்.

மயங்கிய நிலையில் கிடந்தார்

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தோப்புக்கானா சடாய் தெருவை சேர்ந்தவர் சேட்டு (வயது 35). எலக்ட்ரீசியன். இவரது மனைவி பானுமதி (32). இவர்களுக்கு மிதுன்ராஜ் (9), கார்த்தி (4) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். மிதுன்ராஜ் 4-ம் வகுப்பும் கார்த்தி எல்.கே.ஜி.யும் படித்து வருகின்றனர்.

பானுமதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு சேட்டு அதிகமாக பணம் செலவு செய்துள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் மாலை மிதுன்ராஜ் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது தாய் பானுமதி மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைப் பார்த்து கூச்சலிட்டுள்ளார்.

டாக்டர்கள் பரிசோதனை

உடனே அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் பானுமதியை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். பானுமதி இறப்பில் சந்தேகம் அடைந்த அவரது அண்ணன் செல்வம் ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பானுமதியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பானுமதி தாக்கப்பட்டு மூச்சுத் திணறி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பானுமதியின் கணவர் சேட்டுவை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் தனது மனைவி பானுமதிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அதிகப்படியான பணம் செலவு செய்திருந்தேன். இதனை பொருட்படுத்தாமல் அடிக்கடி என்னிடம் தகராறு செய்து வந்தார். அதேபோல் நேற்று முன்தினம் மதியம் தகராறில் ஈடுபட்டார்.

மூச்சுத்திணறி இறந்தார்

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நான் அவரை தாக்கி தலையணையால் முகத்தில் வைத்து அழுத்தினேன். இதில் அவர் மூச்சுத் திணறி இறந்தார். என போலீசார் விசாரணையில் கூறியதாக தெரிகிறது.

இது குறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சேட்டுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.===========

Tags:    

மேலும் செய்திகள்