எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

எலக்ட்ரீசியன் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-06-19 19:30 GMT

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே விநாயகபுரத்தில் குடும்பத்தகராறு காரணமாக எலக்ட்ரீசியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

எலக்ட்ரீசியன்

ஆத்தூர் அருகே உள்ள விநாயகபுரத்தில் கேபிள் தெருவில் வசித்து வந்தவர் சிவக்குமார் (வயது 52), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு ரஞ்சித்குமார் என்ற மகன் உள்ளார்.

சிவக்குமார் ஈரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். அவருடைய மகன் ரஞ்சித் குமார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் சிவக்குமார் ஈரோட்டில் தங்கி வேலை செய்துவிட்டு வாரத்திற்கு ஒரு முறை தனது வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கடந்த 17-ந் தேதி இரவு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

சிவக்குமாருக்கும், அவருடைய மனைவி அமுதாவிற்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்று முன்தினம் மதியம் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த சிவக்குமார், அவரது படுக்கை அறைக்கு சென்று உள்ளார்.

உள்ளே சென்ற கணவன் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை என சந்தேகம் அடைந்த மனைவி படுக்கை அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு கணவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதை பார்த்த அமுதா கூச்சல் இடவே அக்கம் பக்தினர் ஆத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆத்தூர் டவுன் போலீசார், சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்