சமத்துவ பொங்கல் விழா

ஓசூர் மாநகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

Update: 2023-01-11 18:45 GMT

ஓசூர்

ஓசூர் மாநகராட்சி சார்பில், சமத்துவ பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, மேயர் எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் இந்து புரோகிதர்கள், முஸ்லிம் மத குருக்கள் மற்றும் கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆகியோர் முன்னிலையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. ந விழாவையொட்டி மண்பானைகளில் பொங்கலிட்டப்பட்டது. தொடர்ந்து, சூரியனுக்கு பொங்கல் படைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில், கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பொங்கல் பண்டிகை சிறப்பு குறித்து பேசினர்.

Tags:    

மேலும் செய்திகள்