தமிழ்மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக்கொள்ள 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. திருப்பூர் ஜெய்வாபாய், பழனியம்மாள் மாநகராட்சி பள்ளி, அவினாசி, ஊத்துக்குளி, பல்லடம் உள்பட மாவட்டத்தில் 24 மையங்களில் தேர்வு நேற்று நடைபெற்றது. தேர்வுக்கு 7,212 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். விண்ணப்பத்தவர்களில் 6,636 தோ்வு எழுதினர். 576 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.