ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது.

Update: 2022-11-23 18:45 GMT

ராமேசுவரம், 

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்தது.

விரட்டியடிப்பு

ராமேசுவரத்திலிருந்து நேற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்கள் நேற்று இரவு நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு 3 ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு சில படகுகளில் மீனவர்கள் மீன்களுக்காக கடலில் விரித்திருந்த வலைகளையும் வெட்டி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

விசாரணை

இதன் காரணமாக அங்கிருந்து அவசர அவசரமாக புறப்பட்ட மீனவர்கள் தனுஷ்கோடி பகுதியை நோக்கி வந்து மீன் பிடித்தனர். இலங்கை கடற்படை விரட்டியடித்த இந்த சம்பவம் குறித்து இன்று காலை மீனவர்கள் கரை திரும்பிய பின்னரே முழுமையாக தெரியவரும். மேலும் இது தொடர்பாக கியூபிரிவு மற்றும் கடலோர போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்