கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-05-20 20:42 GMT

திருச்சி தாரநல்லூர் நாகசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த வீரன் என்பவரிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக திருச்சி புதூர் வயலூர் ரோடு பகுதியை சேர்ந்த நிர்மல் பாரதி (29) என்பரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கோவை, திருப்பூர், திருச்சி உள்ளிட்ட 24-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் திருச்சி இளங்கோ தெருவில் ஹரிகரன் என்பரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்ததாக ராஜேஷ் என்பவரை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். இதில் நிக்‌ஷன் என்பரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்