விவசாயியிடம் ரூ.13 ஆயிரம் பணம் பறிப்பு

தியாகதுருகத்தில் விவசாயியிடம் ரூ.13 ஆயிரம் பணம் பறித்த 2 பேரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

Update: 2023-10-13 18:45 GMT

தியாகதுருகம்:

தியாகதுருகம் அருகே உள்ள சின்னமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 67). விவசாயி. இவர் நேற்று தியாகதுருகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தனது செலவுக்காக ரூ.13 ஆயிரம் எடுத்தார். பின்னர் அங்கிருந்து வெளியே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், ராமசாமியிடம் இருந்த ரூ.13 ஆயிரத்தை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்று விட்டனர். இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயியிடம் பணம் பறித்த 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்