போலி டாக்டர் கைது

மேல்மலையனூர் அருகே போலி டாக்டர் கைது

Update: 2022-10-15 18:45 GMT

விழுப்புரம்

மேல்மலையனூர் அருகே அவலூர்பேட்டை பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பாஷா மகன் ஷாஜகான்(வயது 50). இவர் மருத்துவ படிப்பு படிக்காமல் வீட்டில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக அவலூர்பேட்டை அரசு ஆரம்ப சுகாதர மருத்துவ அலுவலர் அண்ணாதுரைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பின்னர் இது குறித்து அவர் அவலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் ஷாஜகான் வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் பிளஸ்-2 வரை படித்துள்ள அவர் வீட்டில் வைத்து நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்தது தொியவந்தது. இதையடுத்து ஷாஜகானை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த மருத்துவ உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்