கிணற்றில் தவறி விழுந்து பெண் பலி?

சிவகாசி அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் இறந்தாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-09 19:10 GMT

சிவகாசி, 

சிவகாசி அருகே உள்ள ஈஞ்சார் கிராமத்தை சேர்ந்தவர் காசி. இவரது மனைவி அமராவதி (வயது 50). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் கணவன், மனைவி இருவரும் விவசாய வேலை செய்து வந்தனர். நேற்று மாலை வழக்கம் போல் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற அமராவதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் தோட்டத்திற்கு வந்து பார்த்துள்ளனர். பின்னர் சந்தேகத்தின் பேரில் சிவகாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து விந்த தீயணைப்பு படையினர் அங்குள்ள கிணற்றில் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் அமராவதி உடலை மீட்டனர். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அமராவதி தவறி கிணற்றில் விழுந்து இறந்து இருக்கலாம் என்று தெரிவித்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்