விவசாயி விஷம் குடித்து தற்கொலை

கடையம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-03-31 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே உள்ள தர்மபுரமடம் ஊராட்சி கடனா மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 60). விவசாயியான இவருக்கு திருமணம் ஆகி 3 மகன்கள் உள்ளனர். கருப்பசாமிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தினர் அவரை கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது கருப்பசாமி விஷம் குடித்து மயங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கருப்பசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கருப்பசாமியின் மகன் இசக்கிமுத்து ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்