வாகனம் மோதி விவசாயி சாவு

வாகனம் மோதி விவசாயி இறந்தார்.;

Update:2023-06-03 23:49 IST

அரிமளம் ஒன்றியம், மிரட்டு நிலை அருகே தெற்குபொன்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 43)விவசாயி. இவர் சம்பவத்தன்று தெற்குபொன்னம்பட்டியில் இருந்து நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது மருதன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாண்டியன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாண்டியன் மனைவி ஆராயி கொடுத்த புகாரின் பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்