வேன் மோதி விவசாயி பலி

தலைவாசல் அருகே வேன் மோதி விவசாயி இறந்தார்.

Update: 2022-06-07 19:00 GMT

தலைவாசல்:

தலைவாசல் அருகே உள்ள கமக்காபாளையம் ஊராட்சி வேதநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நல்லியப்பன் (வயது 67). இவருடைய மனைவி பூவாயி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று காலை 7.30 மணிக்கு நல்லியப்பன், மோட்டார் சைக்கிளில் பால் சொசைட்டியில், பால் ஊற்றுவதற்காக வேதநாயகபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த வேன், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த நல்லியப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்