வாகனம் மோதி விவசாயி பலி

ஆலங்குளம் அருகே வாகனம் மோதி விவசாயி பலியானார்.

Update: 2022-08-05 16:31 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே குறிப்பன்குளம் நடுத்தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் பால்துரை (வயது 45). விவசாயியான இவர் தனது தோட்டத்திற்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்தார். மாயமான்குறிச்சி விலக்கு அருகே திருப்பத்தில் வந்தபோது பால்துரையின் மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மினி லோடு வேனும் எதிர்பாராதவிதமாக மோதியதில் பால்துரை தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பால்துரை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்